Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மகனுக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட சாலையோரம் தோசை சுட்டு விற்கும் பிரபல டிவி நடிகை
திருவனந்தபுரம்: பிரபல மலையாள டிவி சீரியல் நடிகை கவிதா லட்சுமி தனது மகனின் படிப்பு செலவை சமாளிக்க சாலையோரம் தோசை சுட்டு விற்பனை செய்கிறார்.
மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கவிதா லட்சுமி. ஏசியாநெட் டிவியில் ஒளிபரப்பான ஸ்த்ரீதனம் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். அவர் தற்போது அயலத்தே சுந்தரி என்ற டிவி தொடரில் நடித்து வருகிறார்.
அந்த தொடரை கே.கே. ராஜீவ் இயக்கி வருகிறார்.
உயர்கல்வி
கவிதா லட்சுமியின் மகன் வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறார். கல்லூரி கட்டணம் அதிகமாக இருப்பதால் கவிதா பணத்திற்காக திண்டாடிக் கொண்டிருக்கிறார்.
வங்கிகள்
மகனை வெளிநாட்டில் படிக்க வைக்க கவிதா லட்சுமி கல்விக்கடன் கேட்டு பல வங்கிகளுக்கு ஏறி இறங்கியது தான் மிச்சம். எந்த வங்கியும் கல்விக் கடன் கொடுக்கவில்லை.
டிவி தொடர்
டிவி தொடர்களில் நடித்து கிடைக்கும் பணத்தை மட்டும் வைத்து மகனின் படிப்பு செலவை சமாளிக்க முடியவில்லை. இதனால் கூடுதலாக ஏதாவது வேலை செய்ய முடிவு செய்தார் கவிதா.
வியப்பு
தனக்கு நன்றாக தோசை சுட வரும் என்பதால் அதையே தொழிலாக செய்யத் துவங்கியுள்ளார் கவிதா. சாலையோரம் தோசைக் கடை நடத்தி வருகிறார் கவிதா. சாலையோரக் கடையில் அவர் தோசை சுடுவதை பார்த்த பலரும் வியப்படைந்தனர்.
வீடியோ
கவிதா லட்சுமி ஒரு சிறிய கடையில் தோசை சுடும்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.