கொம்பன்... ஞானவேல் ராஜாவின் அழுகை ஆனந்தக் கண்ணீராகப் போகிறது!
கொம்பன் படம் வெளியாவதில் உள்ள சிக்கல்கள் குறித்துப் பேச நேற்ற செய்தியாளர்களைச் சந்தித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
அப்போது ஒருகட்டத்தில், நல்ல படம் எடுத்திருக்கிறோம். எந்த சாதியையும் குறிப்பிடக் கூட இல்லை. ஆனால் இப்படி சிக்கல் ஏற்படுத்துகிறார்களே என்று சொல்லும்போதே அழுதுவிட்டார்.

இன்று படத்தை முன்கூட்டியே வெளியிட்டுள்ளார். படம் பார்த்த செய்தியாளர்கள் பலரும் படம் சிறப்பாக வந்திருக்கிறது என்று பாராட்டி பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்ஆப் குழுக்களில் தகவல்களைப் பதிய ஆரம்பித்துள்ளனர்.
முதல் பாதி பார்த்து முடித்தவர்கள், பார்த்தவரை கொம்பன் படம் சிறப்பாக உள்ளது. அருமை எனத் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

படத்தின் ஆரம்பத்திலேயே ராஜ்கிரண் பேசும் வசனத்தைக் குறிப்பிட்டு, இதைவிட எப்படி சாதியை எதிர்க்க முடியும் என்றும் கேட்டுள்ளனர்.
அந்த வசனம்:
ஊர்க்காரர்கள்: அண்ணே நம்ம சாதி சனமெல்லாம் கோயிலுக்கு கெளம்பிட்டாங்க.. நீங்க வரலியா?
ராஜ்கிரண்: சனங்க வந்தா பரவால்ல.. நீங்க சாதியையும் சேர்த்து கூட்டிட்டுப் போறீங்களே.. நான் எப்படி வரமுடியும்!
-சூப்பர்!


Click it and Unblock the Notifications











