பவர் பாண்டி ட்ரெய்லர் வெளியீடு: இயக்குனர் தனுஷ் எப்பூடி?
சென்னை: தனுஷ் இயக்கியுள்ள பவர் பாண்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
நடிகர், பாடகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியரான தனுஷ் பவர் பாண்டி படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவின் முதல் ஹீரோ தான் இயக்குனர் தனுஷின் முதல் ஹீரோ ஆவார்.

படம் வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாகியுள்ளது. ட்ரெய்லரை பார்த்தால் புதுமுக இயக்குனரின் படைப்பு போன்று இல்லை.
வயதான காலத்தில் ராஜ் கிரணுக்கும், ரேவதிக்கும் இடையே காதல் வருகிறது. இதை ராஜ் கிரணின் மகனான பிரசன்னா எதிர்க்கிறார். ராஜ் கிரண் ட்ரெய்லரில் அசத்தியுள்ளார்.
நீங்களும் ட்ரெய்லரை பார்த்துவிட்டு இயக்குனர் தனுஷ் எப்படி என்று சொல்லுங்களேன்?


Click it and Unblock the Notifications











