Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பவர் பாண்டி கெட் டுகெதர்...சவுந்தர்யா ரஜினிகாந்த் கார் மோதி ஆட்டோ டிரைவர் காயம்
சென்னை: ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா கணவரை பிரிந்து தனியாக வாழ்கிறார். அவர் தற்போது தனது அக்காவின் கணவர் தனுஷை வைத்து விஐபி 2 படத்தை இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பில் பசியாக இருக்கும் அவர் நேரம் கிடைக்கும்போது தனது குட்டி மகன் வேத் கிருஷ்ணாவை வெளியே அழைத்துச் செல்கிறார்.
பவர் பாண்டி
தனுஷ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. அதன் பிறகு விஐபி2 குழு, பவர் பாண்டி குழுவின் கெட் டுகெதர் நடந்தது.
|
சவுந்தர்யா
பவர்பாண்டி மற்றும் விஐபி2 ஆகிய படக்குழுவினரின் கெட் டுகெதரில் சவுந்தர்யா கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் ட்விட்டரில் வெளியிட்டார்.
விபத்து
கெட் டுகெதர் புகைப்படத்தை வெளியிட்ட பிறகு சவுந்தர்யாவின் கார் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆட்டோ
சவுந்தர்யா ஓட்டிச் சென்ற கார் ஆழ்வார்பேட்டையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் மணி காயம் அடைந்தார்.
தனுஷ்
நடிகர் தனுஷ் ஆட்டோ டிரைவர் மணியை சமாதானம் செய்தார். இதனால் காயம் அடைந்தும் மணி இந்த விபத்து குறித்து போலீசில் புகார் அளிக்கவில்லை.