Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரூ.50 லட்சம் மோசடி: பவர் ஸ்டார் சீனிவாசன் கைது, புழல் சிறையில் அடைப்பு
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பி.எஸ். ரங்கநாதன்(60). ஹோட்டல் அதிபர். அவர் தனது தொழிலை மேம்படுத்த பலரிடம் கடன் கேட்டுள்ளார். அப்போது அவரை 2 ஏஜெண்டுகள் சந்தித்துள்ளனர். அதில் ஒருவர் சென்னையைச் சேர்ந்தவர், மற்றொருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். அவர்கள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து பணம் வாங்கித் தருவதாக ரங்கநாதனிடம் கூறினர். பின்னர் ரங்கநாதனை பவர் ஸ்டார் சீனிவாசனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
அப்போது ரூ.20 கோடி கடன் வாங்கித் தருகிறேன் என்று உறுதியளித்த பவர் தனக்கு கமிஷனாக ரூ.50 லட்சம் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கான ஒப்பந்தத்திலும் பவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையெழுத்து போட்டுள்ளார்.
ஆனால் பல மாதங்கள் ஆகியும் பவர் கடன் வாங்கியும் கொடுக்கவில்லை, வாங்கிய கமிஷன் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை. இதையடுத்து ரங்கநாதன் கடந்த அக்டோபர் மாதம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இது குறித்து குற்றப்பிரிவு துணை கமிஷனர் சிவகுமார், உதவி கமிஷனர் ஸ்ரீதர் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினார்.
பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 420 (மோசடி), 406 (நம்பிக்கை மோசடி), 120 (பி) (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை இன்று அதிகாலை சாலிகிராமம் அருகே கைது செய்தனர். அவரை கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துவிட்டு எழும்பூரில் உள்ள மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து பவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பவர் இதுபோன்று பலரிடம் மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதனால் பவரிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுக்கலாம் என்றும், கவர்ச்சிகரமான உறுதிமொழியை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் போலீசார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.