Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பீப் பாடல் ஒட்டுமொத்த பெண் இனத்தையே கேவலப்படுத்தி விட்டது: ''பவர்ஸ்டார்''
சென்னை: "பீப் பாடல் கண்டனத்திற்குரிய ஒன்று. யார் பாடியிருந்தாலும் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்" என்று பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சிம்பு, அனிருத் கூட்டணியில் வெளியான பீப் பாடல் சர்ச்சை தமிழ்நாட்டில் இன்னும் முடியவில்லை. நேற்று இது குறித்து பேட்டி அளித்த நடிகர் சிம்பு அனிருத்திற்கும் இந்தப் பாடலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
இந்தப் பாடலுக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்கிறேன் என்று கூறியிருந்தார். இந்தப் பாடலுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்த நிலையில், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
"பீப் பாடல் கண்டனத்திற்குரிய ஒன்று. இந்தப் பாடல் பெண் இனத்தையே கேவலப்படுத்தி இருக்கிறது.பாடலை யார் பாடியது, யார் எழுதியது என்று எனக்குத் தெரியவில்லை.
ஆனால் யார் பாடியிருந்தாலும் இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.தமிழ்நாட்டில் தமிழனே இப்படிப் பாடினால் அது மிகவும் தவறு. இந்தப் பாடல் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும்".
இவ்வாறு பவர் ஸ்டார் ஸ்ரீநிவாசன் கூறியிருக்கிறார். இவர் நடித்திருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.