Don't Miss!
- News வெள்ள பாதிப்பிலிருந்து மீளாத துபாய்.. இரண்டாவது நாளாக இன்றும் சென்னை டூ UAE விமானங்கள் ரத்து!
- Sports IPL 2024 : ஒரு சம்பவம்.. 3 அணிகளின் சோலியும் முடிஞ்ச்.. அம்பானியை கிண்டல் செய்யும் சிஎஸ்கே ஃபேன்ஸ்!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அமரேந்திர பாகுபலியைத் தொடர்ந்து அதிரடி போலீசாக மாறும் பிரபாஸ்
ஹைதராபாத்: பாகுபலியில் அமரேந்திர பாகுபலியாய் அசத்திய பிரபாஸ் அடுத்து போலீஸ் அதிகாரியாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் உலகளவில் தெரிந்த நடிகராக மாறியிருக்கிறார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்தில் நடித்து வரும் பிரபாஸ் அடுத்து எந்த மாதிரியான படத்தில் நடிக்கப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் 'ரன் ராஜா ரன்' புகழ் சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருகின்றன. இந்தப் படத்தில் முதல் முறையாக பிரபாஸ் போலீஸாக நடிக்கவிருப்பதாக கூறுகின்றனர்.
பாகுபலி 2 வுக்குப் பின் பிரபாஸ் நடிக்கும் இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பல பெரிய இயக்குநர்களும் பிரபாசை இயக்க காத்திருக்கும் நிலையில் சுஜீத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாக இந்த வாய்ப்பை பிரபாஸ் கொடுத்திருப்பதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
13 வருடங்களில் 19 படங்கள் நடித்திருக்கும் பிரபாஸ் இதுவரை எந்தப் படத்திலும் போலீஸ் வேடத்தில் நடித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.