Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
சென்னை: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஜர் ஃபெடரர் சொன்னது நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்ன் நகரில் நடைபெற்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் ஃபெடரரும், ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நாடாலும் மோதினர்.
இந்த போட்டியில் 6-4, 3-6, 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ஃபெடரர் நாடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். இது ஃபெடரர் வென்றுள்ள 18வது கிராண்ட்ஸ்லாம் கோப்பை ஆகும்.
கோப்பையை வென்ற ஃபெடரர் கூறுகையில்,
டென்னிஸ் கடினமான விளையாட்டு. இங்கு டிரா இல்லை ஆனால் அப்படி இருந்திருந்தால் நான் சந்தோஷமாக ரஃபாவுடன்(நாடால்) ஷேர் செய்திருப்பேன் என்றார்.
ஃபெடரரின் இந்த கருத்து நடிகர் பிரகாஷ்ராஜை வெகுவாக கவர்ந்துள்ளது.
Loved this expression of a winner... https://t.co/DSyXmMMoR7
— Prakash Raj (@prakashraaj) January 29, 2017
ஃபெடரரிடம் நாடால் தோற்றதை நினைத்து தனுஷ் இதயம் நொறுங்கிப் போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.