Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கல்யாணம் செல்லாது- அறிவிக்கக் கோரி பிரஷாந்த் மனு
சென்னை:
எனக்கும், கிரகலட்சுமிக்கும் நடைபெற்ற திருமணம் சட்டபடி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என நடிகர் பிரசாந்த் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் பிரசாந்திற்கும், கிரகலட்சுமிக்கும் கடந்த 2005-ல் திருமணம் முறைப்படி நடைபெற்றது. பின்பு பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற கிரகலட்சுமி மீண்டும் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை. மேலும் கணவர் பிரசாந்த் மீதும் வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் திடீரென வேணுபிரசாத் என்பவர், நான் கிரகலட்சுமியை முதல் திருமணம் செய்தவர் என்று அதற்கான ஆதாரங்களை போலீஸாரிடம் காட்டி புகார் அளித்தார். அதில் அவர் 13.11.1998-ல் இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், 13.12.1998-ல் முறைப்படி திருமணம் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த பிரசாந்த், தனக்கும் கிரகலட்சுமிக்கும் நடந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றும், தனக்கு பிறந்த குழந்தையை தன்னிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் ஆணையிட வேண்டும் என்று தன்னுடைய வக்கீல் ஆனந்தன் மூலம் குடும்ப நல நீதி மன்றத்தில் இன்று புதியதாக தாக்கல் செய்த மனுவில் நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.