என் வாழ்க்கையை எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்… நெட்டிசன்களால் கடுப்பான பிரியா வாரியர் !
மும்பை : பிரியா வாரியர், தன்னை பற்றி தவறான செய்தி பரப்புபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் சில வலைததளங்களில் கேலிக்குரிய தலைப்புகள் மற்றும் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.
என் மீது உள்ள அக்கறையில் இதை நீங்கள் செய்தாலும், இது தேவையற்ற ஒன்று மிகவும் கோபத்துடன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.

உலக புகழ்
மலையாள நடிகையான பிரியா வாரியர், ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை உயர்த்தியும், சுருக்கியும், கண் அடித்தும் உலகம் புகழ் பெற்றார். பருவப்பெண்ணாக இருந்த பிரியா வாரியர். அந்த படத்தில் பள்ளி மாணவியாகவே நடித்து இருந்தார். முத படமே வெற்றி பெற்றதால் அவருக்கு மலையாள கரையோரத்தில் ஏகப்பட்ட மவுசு.

ஹைலைட்
அவர் காட்டிய முகபாவத்தில் சொக்கிப்போன ரசிகர்களின் பேராதரவால், ஒரே நாளில் பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றார். அந்த பெண்ணுக்கு ஹைலைட்டே அந்த கண்ணுதான்பா என்று அனைவரும் ரசித்து ரசித்து வியந்து பாராட்டும் அளவுக்கு உச்சம் பெற்றது அந்த கண்ணடி சில்மிஷம்.

கடும் எச்சரிக்கை
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது நண்பர்களுடன் வெளியில் செல்லும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை சிலர் அவதூறு செய்தியாக பரப்புகின்றனர். இதனால் கடுப்பான பிரியா வாரியர், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் , தவறாக செய்தி பரப்புபவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

என் தனிப்பட்ட விருப்பம்
நான் என் நண்பர்களுடன் வெளியில் செல்வதை வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் சில வலைததளங்களில் கேலிக்குரிய தலைப்புகள் மற்றும் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. என் மீது உள்ள அக்கறையில் இதை நீங்கள் செய்தாலும், இது தேவையற்ற ஒன்று. நான் எனது நண்பர்களுடன் என்ன செய்கிறேன், என் வாழ்க்கையை எப்படி வாழ்கிறேன் என்பது எனது தனிப்பட்ட விருப்பம். எனவே, உங்கள் கருத்துக்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று மிகவும் கோவமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











