Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தயாரிப்பாளர் சங்க தேர்தல்: விஷால் வேட்பு மனு நிறுத்தி வைப்பு
சென்னை: விஷாலின் வேட்பு மனுவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றம் செல்ல இருப்பதால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 5ம் தேதி நடக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரின் வேட்புமனுவை உலக நாயகன் கமல் ஹாஸன் முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார்.
அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடவுள்ளனர். இதனையடுத்து அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக தேர்தல் அதிகாரி ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தயாரிப்பாளர் சங்க தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் 5ல் தேர்தல் நடைபெறும். இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்.8 ஆம் தேதி வெளியிடப்படும். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 6 பேரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. விஷாலின் மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விஷாலின் வேட்பு மனுவிற்கு ஏதிராக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாட இருப்பதால் அவருடைய மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் முடிவை பொறுத்து அவரது மனு பரிசிலிக்கப்படும்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 21 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு 99 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 2 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்துள்ளார்.