Don't Miss!
- News வாய்ப்பு மறுத்த பாஜக.. தொகுதி மக்களுக்கு 'வருண் காந்தி' உணர்ச்சி பொங்க கடிதம்! உ.பியில் சலசலப்பு
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கலைப்புலி தாணு தலைமையில் தயாரிப்பாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றனர்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவி ஏற்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கியிருந்த தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று தேர்தல் நடைபெற்றது.
இதில் அதிக வாக்குகள் பெற்று தலைவராக தேர்வானார் கலைப்புலி எஸ் தாணு. துணைத் தலைவர்களாக எஸ் கதிரேசனும், பி எல் தேனப்பனும் தேர்வு செய்யப்பட்டனர்.
டிஜி தியாகராஜன் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
டி சிவா மற்றும் ராதாகிருஷ்ணன் இருவரும் பொதுச் செயலாளர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
21 செயற்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ராதா பார்க் இன் ஹோட்டலில் நடந்தது.
நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர்கள் அனைவரும் திரண்டு வந்து புதிய நிர்வாகிகளை வாழ்த்தினர். முன்னாள் தலைவர் கேஆர் நேரில் வந்து புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.