தயாரிப்பில் ஒரு கை பாத்தாச்சு... அடுத்து டைரக்ஷன்... தேறுவாரா சீவீ குமார்?
சினிமாவில் அனைத்தையும் கரைத்துக் குடித்தவர் ரேஞ்சுக்குப் பேசுபவர் சீவீ குமார். திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர்.
பல புதிய இயக்குநர்களை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய குமார், இப்போது தானே இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார்.
இவர் இயக்கவிருக்கும் முதல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனமும் இணைந்து இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால் மற்றும் கலை இயக்கம் கோபி ஆனந்த்.
அக்டோபர் 5ம் தேதி இப்படத்தின் படபிடிப்பு தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











