Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 1 hr ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டைரக்டர் என் பேச்சைக் கேட்கவில்லை - படத்தை ரீ-எடிட் செய்தது பற்றி 'சோலோ' தயாரிப்பாளர் விளக்கம்
சென்னை : துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா சர்மா ஆகியோர் நடித்த இருமொழிப்படமான 'சோலோ' கடந்த வாரம் வெளியானது.
ஆந்தாலஜி வகையில், நான்கு கதைகள் சேர்ந்த இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் திருப்தியாக இல்லை என ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதையடுத்து, இயக்குனர் பிஜோய் நம்பியாரின் அனுமதி பெறாமலேயே க்ளைமாக்ஸை ரீ-எடிட் செய்து வெளியிட்டது தயாரிப்பாளர் தரப்பு. இது மலையாளத் திரையுலகில் சர்ச்சையை உண்டாக்கியது.

படக்குழுவினர் வருத்தம்
இதற்கு இயக்குனர் பிஜோய் நம்பியாரும், நாயகன் துல்கர் சல்மானும் தங்களது வருத்தம் கலந்த கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். தயவுசெய்து 'சோலோ' படத்தைக் கொன்று விடாதீர்கள் என துல்கர் சல்மான் உருக்கமாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

க்ளைமாக்ஸில் திருப்தி இல்லை
இந்நிலையில், ஏன் ரி-எடிட் செய்தோம் என தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ விளக்கம் அளித்துள்ளார். 'படத்தின் வேலைகள் முடிந்தபின், நானும் ஒரு ரசிகனாக இந்தப்படத்தை பார்த்தபோது, ருத்ராவின் உலகம் அதாவது நான்காம் பகுதியில் இடம்பெற்ற க்ளைமாக்ஸ் ஏற்கும் விதமாக இல்லை.

க்ளைமாக்ஸ் மாற்றச் சொன்னேன்
அதனால் இயக்குனரிடம் அதன் க்ளைமாக்ஸை கொஞ்சம் மாற்றுங்கள் எனக் கூறினேன். த்ரிலோக்கின் உலகம் ஒரு க்ளைமாக்ஸ்க்கு உண்டான நிறைவுடன் இருந்ததால், அந்த எபிசோடை கடைசியாக வைக்கும்படியும் சொன்னேன்.

டைரக்டர் கேட்கவில்லை
ஆனால் நான் சொன்ன எதையுமே காதில் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார் இயக்குனர். எதிர்பார்த்தது போலவே படம் வெளியானதும் எதிர்மறையான விமர்சனங்களே நிறைய வர ஆரம்பித்தன.

வேறு வழியில்லை
வேறுவழியில்லாத நிலையில் தான் ரசிகர்களை திருதிப் படுத்தும் பொருட்டு 'சோலோ' படத்தை ரீ-எடிட் செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது' என விளக்கம் அளித்துள்ளார் 'சோலோ' படத்தின் தயாரிப்பாளர் ஆப்ரஹாம் மேத்யூ.