Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஒரு நாளுக்கு இவ்வளவு செலவு வைப்பதா? நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது தயாரிப்பாளர் புகார்!
சென்னை: நடிகைகள் நயன்தாரா, ஆண்ட்ரியா மீது பிரபல தயாரிப்பாளர் பரபரப்பு புகார் கூறியுள்ளார்!
Recommended Video
அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா உட்பட பலர் நடித்துள்ள படம், வெட்டி பசங்க.
இந்த படத்தை மஸ்தான் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நடிகர், நடிகைகள்
விழாவில் தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன் பேசும்போது, நடிகர், நடிகைகள் அதிகம் செலவு வைப்பதாகக் கூறினார். அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில் தயாரிப்பு செலவுகளையும், நடிகர், நடிகைகள் சம்பளத்தையும் குறைக்க வேண்டும். சில நடிகர், நடிகைகள் அதிக செலவு வைக்கிறார்கள்.

தங்கும் செலவுகள்
நடிகை நயன்தாரா, தனக்கு மும்பையில் இருந்து சிகை அலங்கார நிபுணரையும், ஆடை வடிவமைப்பாளரையும் வர வைக்கிறார். அவர்களுக்கு சம்பளம், விமான செலவு, ஓட்டலில் தங்கும் செலவுகளை தயாரிப்பாளர் கவனிக்க வேண்டி இருக்கிறது.

ஆடை வடிவமைப்பாளர்
அவரது மேக்கப் மேன், உதவியாளர்கள் உட்பட மொத்தம் 7 பேருக்கு தயாரிப்பாளர் ஒரு நாளைக்கு ரூ.1.5 லட்சம் செலவு செய்ய வேண்டி உள்ளது. அவர் 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் உதவியாளர்களுக்கு சுமார் ரூ.60 லட்சம் செலவாகிறது. தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆண்ட்ரியாவும் மும்பை ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்கார நிபுணர் வேண்டும் என்கிறார்.

தயாரிப்பாளர் நஷ்டம்
நடிகர்களும் தங்களுக்கான பாடிகார்டுகளுக்கு தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுக்க வேண்டும் என்கின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைகின்றனர். இப்படிப்பட்ட செலவுகள் குறைக்கப் பட்டால்தான் சினிமா வாழும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்.வி.உதயகுமார்
விழாவில், தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி, டைரக்டர் ஆர்.வி.உதயகுமார், கவிஞர் சினேகன், ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர்கள் ராதா கிருஷ்ணன், போஸ் வெங்கட், சக்கரவர்த்தி, வாராகி, இசையமைப்பாளர் அம்ரீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரேகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.