Don't Miss!
- News நெருங்கும் தேர்தல்.. திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் ஜோதிமுத்து அதிரடி மாற்றம்.. வைரமுத்து நியமனம்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Lifestyle 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- Automobiles ஏப்.1ம் தேதி முதல் சுங்ககட்டணம் உயர்கிறது! எங்கு, எவ்வளவு உயர்கிறது தெரியுமா?
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
விஷாலுக்கும் விஜய் சேதுபதிக்கும் தரவேண்டியதெல்லாம் தந்தாச்சு: நந்தகோபால்
நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதிக்கு சம்பள பாக்கி ஏதும் தரவேண்டியது இல்லை என தயாரிப்பாளர் நந்தகோபால் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி உள்ளிட்டோருக்கு தான் சம்பள பாக்கி எதுவும் தர வேண்டியது இல்லை என தயாரிப்பாளர் நந்தகோபால் விளக்கமளித்துள்ளார்.
நடிகர்கள் விஷால், விஜய் சேதுபதி, விக்ரம் பிரபு ஆகியோருக்கு, மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளரும், 96 படத்தின் தயாரிப்பாளருமான நந்தகுமார் ஊதியபாக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஒத்துழையாமை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் குற்றச்சாட்டை தயாரிப்பாளர் நந்தகோபால் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
"தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எனக்கு ஒரு மொட்டைக் கடிதாசி வந்துள்ளது. அதில் யாருடைய கையெழுத்தும் இல்லை.
இதுவரை நான் எடுத்த அனைத்து திரைப்படங்களிலும் எனது மனசாட்சிக்குட்பட்டு செயல்பட்டு வருகிறேன். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு முழு ஊதியத்தையும் தயாரிப்பாளர் என்ற முறையில் முழுமையாக வழங்கிவிட்டேன்.
தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த அறிக்கையை அனுப்பினார்களா அல்லது ஒரு சிலர் வேண்டுமென்றே அனுப்பியிருக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் திங்கள் கிழமைக்குள்ளாக உரிய முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லையெனில் நான் ஒரு முடிவை அறிவிக்க உள்ளேன்.
தயாரிப்பாளர்கள் சங்கம் பேசி எடுக்கிற எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுகிறேன்", என நந்தகோபால் கூறினார்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினுள் மோதல்கள் இருக்கிறதா என்ற கேள்விக்கு அது குறித்து முழுமையான பதில் திங்கள் கிழமை தெரிவிக்கிறேன் எனவும் நந்தகோபால் தெரிவித்தார். மேலும் இப்பிரச்சினை தொடர்பாக, டெல்லியில் உள்ள காம்படிடிவ் கமிஷன் ஆப் இந்தியாவில் முறையிட இருப்பதாகவும் நந்தகோபால் கூறினார்.
-
Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
-
Seshu: கடைசியா ரீ-யூனியன் ஷோ ஒன்றை நடத்தி எல்லாரையும் மீட் செய்ய வச்சாரு.. லொள்ளு சபா ஜீவா உருக்கம்!
-
சேசு மறைவு.. எங்களை வாழ்த்தி விட்டு அவர் சென்று விட்டார்.. வடக்குப்பட்டி ராமசாமி நடிகர் உருக்கம்