Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்த தாக்குதல்'... சமூக வலைத்தள பயனாளர் மீது வழக்கு!
விமர்சனம் என்ற பெயரில் சினிமாவையும் சினிமா கலைஞர்களையும் தரக்குறைவாகப் பேசி அவதூறு பரப்புவதாகக் கூறி இரு சமூக வலைத் தளப் பயனாளர்கள் மீது ஜேஎஸ்கே கோபி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மேலும் இவர்களின் யுட்யூப் சேனல்களை முடக்கவும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
'விமர்சனம் என்ற பெயரில் தரம் தாழ்ந்த தாக்குதல்'... சமூக வலைத்தள பயனாளர் மீது வழக்கு! pic.twitter.com/OWBkZkwIB5
— Oneindia Tamil (@thatsTamil) October 25, 2016
ஜேஎஸ்கே கோபியில் இந்த நடவடிக்கைக்கு திரையுலகின் முக்கிய அமைப்புகளான தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம், நடிகர் சங்கம் மற்றும் பிஆர்ஓ யூனியன் ஆகியவையும் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து ஜேஎஸ்கே கோபி கூறுகையில், "நான் திரை விமர்சனங்களை எதிர்க்கவில்லை. விமர்சனம் என்பது அனைவருடைய உரிமை. ஆனால் அதே சமயம் சமுக வலைதளமான YOUTUBE போன்றவைகளில் விமர்சனம் என்ற பெயரில் தரக்குறைவாக நடிகர் நடிகைகளையும் இயக்குநர்களையும் மற்றும் டெக்னீஷீயன்களை விமர்சனம் செய்து மார்க் போட்டு அதில் நடுவே விளம்பரம் செய்து பிழைத்து, அதே சினிமாவை கேவலமான முறையில் பேசும் ஒரு சில நபர்கள் மீதுதான் வழக்குத் தொடர்கிறேன்.
இதற்கு தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம் மற்றும் பி ஆர் ஓ யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளன. நிச்சயமாக YOUTUBEல் வரும் இது மாதிரியான அநாகரீகமான விமர்சனங்கள் விரைவில் நிறுத்தப்படும். சமூக வலைதளமான YOUTUBE-ல் சினிமா விமர்சனம் என்ற பெயரில் சினிமா நடிகர் நடிகைகளையும் இயக்குநர் தொழில்நுட்ப கலைஞர்களையும் தரக்குறைவாக பேசி விமர்சித்து படம் ரிலீஸான முதல்நாளே அந்த திரைப்படத்தின் முழுக்கதையும் கூறி அந்த தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தக்கும் பெரும் இழப்பீடு ஏற்படுத்தும் இரு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளேன்.
எனது இந்த நடவடிக்கைக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம்,பி ஆர் ஓ யூனியனும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
சினிமாவை கேவலப்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் இந்த மாதிரி நபர்கள் நடத்தும் சேனல்களை முடக்க YOUTUBE LEGAL அலுவலகத்திற்கும் புகார் அனுப்பியுள்ளோம்," என்றார்.
ஜேஎஸ்கே கோபிக்கு தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளன.
-
என் குடும்பம் தான் என் பலம்.. எனக்கு தோன்றியதை செய்வேன்.. ஏ.ஆர்.ரகுமானின் மகள் பேட்டி!
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா