Don't Miss!
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
தமிழ்ராக்கர்ஸ், தமிழ்கன் அட்மின் படங்களை வெளியிட்டது தயாரிப்பாளர் சங்கம்!!
சென்னை : தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் கன் ஆகிய இரு இணைய தளங்களின் நிர்வாகிகள் என்று கூறி இரு நபர்களின் படங்களை தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்டுள்ளது.
இவர்களைப் பற்றி தகவல் தருமாறும் அச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழில் வெளியாகும் புதிய படங்களை உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றி, திரைத் தொழிலை சிதைப்பதாக இந்த இணைய தளங்களின் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள தயாரிப்பாளர் சங்கம், அண்மையில் வேலூர் அருகே திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரி சங்கர் என்ற இளைஞரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் இப்போது இங்கிலாந்தில் வசிக்கும் டிக்சன் ராஜ் ஆறுமுக சாமி (தமிழ்கன், தமிழ்தபாக்ஸ் நிர்வாகி), தமிழ் ராக்கர்ஸ் மாடரேட்டர் அரவிந்த் லோகேஷ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
இவர்கள் பற்றி விவரம் தந்தால் தகுந்த சன்மானம் தரப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.