Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'இறைவி' கார்த்திக் சுப்பராஜுக்கு ரெட்? கொந்தளிக்கும் தயாரிப்பாளர் சங்கம்!!
சென்னை: இறைவி படத்தில் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்தும், அவதூறாகப் பேசியும் காட்சிகள் வைத்ததற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு தடைவிதிக்குமாறு தயாரிப்பாளர்கள் பலர் வலியுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது தயாரிப்பாளர் சங்கம்.
முன்னதாக நேற்று இறைவி படம் பார்த்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அந்தப் படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் காட்சிகள், வசனங்கள் உள்ளதாகக் கூறி கார்த்திக் சுப்பராஜுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதை ஒன்இந்தியா வெளியிட்டது.
இந்த விஷயம் பிற்பகலுக்குள் தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பைக் கிளப்பியது. உடனடியாக கார்த்திக் சுப்பராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
உடனடியாக இதுகுறித்து விசாரிக்க ஒரு குழுவை அமைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு.
இந்தப் படத்தில் தயாரிப்பாளர்களை அவமதிக்கும் காட்சிகள், வசனங்கள் எவை என்பதை இன்று இந்தக் குழு அடையாளம் காண வசதியாக ஆர்கேவி தியேட்டரில் சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஞானவேல் ராஜா.
மாலை 6 மணிக்கு அந்தக் காட்சியைப் பார்த்த பிறகு கார்த்திக் சுப்பராஜ் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.