Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஷால் வெற்றி... சந்தேகம் கிளப்பும் தயாரிப்பாளர்கள்!
நடிகர் விஷால் தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டாலும், அந்த வெற்றி சந்தேகத்துக்குரியதாகவே திரையுலகினரால் பார்க்கப்படுகிறது.
இந்தத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் 1059 என அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் இவ்வளவு வாக்குகள் பதிவாயினவா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் தேர்தல் நடந்த இடத்தில் இருந்த எதிரணியினர். வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோதே மூன்று முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாம்.
இந்தத் தேர்தல் தொழில்முறை தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பாளர்களாக மாறிய நடிகர்களுக்குமான போட்டியாகத்தான் பார்க்கப்பட்டது. அப்படிப் பார்த்தால் தயாரிப்பாளர்கள் தரப்பு கிட்டத்தட்ட 600 வாக்குகளைப் பெற்றுள்ளது. விஷாலோ 476 வாக்குகள்தான் பெற்றுள்ளார்.
கடந்த தேர்தலில் கலைப்புலி எஸ் தாணு போட்டியிட்டபோது பதிவான வாக்குகள் 900. அவற்றில் 700 வாக்குகளை தாணு பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பெருவாரியான வாக்குகளை விஷால் பெறவில்லை. தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் இரண்டாகப் பிரிந்து நின்றதே தோல்விக்குக் காரணம் என இப்போது ஆதங்கப்படுகிறார்கள் விஷாலை எதிர்த்த இரு அணியைச் சேர்ந்தவர்களும்.
இதைத்தான் ஆரம்பத்திலிருந்த கலைப்புலி தாணுவும் இன்னும் சிலரும் சொல்லிக் கொண்டே இருந்தனர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, விஷாலுக்கு எதிராக ஒரே அணியாக நிற்கலாம் என்றார் தாணு. ஆனால் யாரும் கேட்கவில்லை.
'முதலில் தேர்தல் நடத்தத் தேர்வு செய்யப்பட்ட இடம் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டர். ஆனால், திடீரென்று கந்தசாமி நாயுடு கல்லூரிக்கு மாற்றிவிட்டனர். அதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை' என்று சந்தேகம் கிளப்புகிறார்கள் இன்னும் சிலர்.
வாக்குப் பதிவு நடந்த நேரத்தில் விஷால் அணியினருக்கு வேண்டப்பட்ட இளைஞர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும், குறிப்பாக வாக்குப் பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு விஷால் மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் மூன்று முறை தேர்தல் அதிகாரியை தனிப்பட்ட முறையில் போய்ப் பார்த்ததாக ஒரு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேல்... விஷால் தரப்பின் கணிசமான கவனிப்பு. கொடுக்கும் இடத்தில் இருக்கும் முதலாளிகள் நாங்கள் என சொல்லிக் கொண்டிருந்த தயாரிப்பாளர்களில் பெரும்பாலானோர் அங்கும் கைநீட்டியதாகச் சொல்கிறார்கள். உண்மை அந்த பராபரனுக்கே வெளிச்சம் என்கிறார்கள்.
இதற்கெல்லாம் விஷால் தரப்பு பதில் என்னவோ?