Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அனேகன் ஓடும் அரங்குகளை முற்றுகையிடுவோம் - சலவைத் தொழிலாளர்கள் அறிவிப்பு
தூத்துக்குடி: அனேகன் படம் ஓடும் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்று சலவைத் தொழிலாளர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
உடன்குடி வில்லிக்குடியிருப்பில் திருகுறிப்பு தொண்டர் மகாசபையின் சங்க செயல் விளக்க கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநில தலைவர் மாரிச்செல்வம், தூத்துக்குடி மாவட்ட தலைவர் மாயாண்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சங்க வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் பற்றி பேசினர்.
கூட்டத்தில் நடிகர் தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தில் சலவை தொழிலாளர்களை இழிவுபடுத்தும் காட்சிகள் உள்ளன. அதை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையேல் 'அனேகன்' படம் ஓடும் தியேட்டர்களில் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.
ஏற்கெனவே மதுரையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள் படத்துக்கு எதிராக மதுரை போலீசாரிடம் புகார் கொடுத்தது நினைவிருக்கலாம்.