Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பெரிய கோஹ்லி, அனுஷ்கான்னு நெனப்பு: பிக் பாஸ் ஜோடியை கலாய்த்த நெட்டிசன்கள்
Recommended Video
மும்பை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காதல் ஜோடியை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.
சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் 11 போட்டியில் கலந்து கொண்டவர்கள் புனீஷ் சர்மா, பந்தகி கல்ரா. காதல் ஜோடியான அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் மீடியாவின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
நெருக்கமாக புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.
பந்தகி
பந்தகி தனது கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது எடுத்த செல்ஃபியை புனீஷ் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களை கலாய்க்கத் துவங்கிவிட்டனர்.
புகைப்படம்
அனுஷ்கா தனது கன்னத்தில் முத்தம் கொடுத்தபோது செல்ஃபி எடுத்து வெளியிட்டிருந்தார் விராட் கோஹ்லி. அவர்களை போன்றே புகைப்படம் எடுத்ததால் தான் நெட்டிசன்கள் புனீஷ், பந்தகியை கலாய்த்துள்ளனர்.
கோஹ்லி
கோஹ்லி மாதிரியே அப்படியேவா காப்பியடிப்பீர்கள். வேறு வேலையே இல்லையா புனீஷ் உங்களுக்கு என்று ஆளாளுக்கு அவரை கிண்டல் செய்கிறார்கள்.
பாராட்டு
நெட்டிசன்கள் பலரும் புனீஷ், பந்தகியை கலாய்த்துக் கொண்டிருக்க அவர்களின் ரசிகர்களோ காப்பியடித்தால் என்ன நல்லா தானே இருக்கிறது என்று பாராட்டியுள்ளனர்.
காதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது தான் புனீஷ், பந்தகி இடையே காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்கள், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் பிரிந்துவிடுவார்கள் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால் இன்னும் ஒன்றாகத் தான் உள்ளனர்.