Don't Miss!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தர்மபுரி கலவரமா 'கௌரவம்'? - ராதா மோகன் விளக்கம்
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சிரிஷ், யாமி குப்தா நடிக்கும் படம் கௌரவம். ராதா மோகன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் கதை, தர்மபுரியில் சமீபத்தில் நடந்த கலப்பு திருமண மோதலை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இதனால் இப்படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் காட்சிகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்தப் படத்துக்கு கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை என்ற சாதிக் கட்சியின் தலைவரான பொங்கலூர் ரா.மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கலப்பு திருமணத்துக்கு எதிராக கௌரவ கொலைகள் போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றும் சாதி, மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தியும் வன்முறைகளை தூண்டிவிடும் வகையிலும் காட்சிகள் உள்ளதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், "கௌரவம் படத்தை தர்மபுரி கலவரத்தை அடிப்படையாக வைத்து எடுத்திருப்பதாகக் கூறப்படுவது தவறு. வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்தப் படத்தை ரிலீசுக்கு முன்பே காட்டத் தயார்," என்றார்.