Don't Miss!
- Finance
மத்திய பட்ஜெட் 2023: நிறையத் தண்ணீர் குடிங்க.. பட்ஜெட் போர் அடிக்கலாம்..!
- News
இந்தியாவின் 'கனவு பட்ஜெட்' என அழைக்கப்பட்ட 1997-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்..ஏன் தெரியுமா?
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
தவறாக பேசியிருந்தால் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க மாட்டேன்… ராதாரவி அதிரடி!
கோவை: தவறாக பேசினால் மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கோவையில் புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

அந்த நிகழ்வில் பேசிய நடிகர் ராதாரவி மனித மலத்தை மனிதனே அல்லும் அவல நிலையைக் கண்டு கொதித்து, அருந்ததியர் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்தார். வட மாநிலத்தில் சில அமைப்புகள் அம்பேத்கர் பெயரே இந்தியாவில் இருக்கக் கூடாது என முழக்கமிட்டபோது அதை எதிர்த்து அம்பேத்கருக்கு சிலை வைத்தார். என கலைஞரின் சாதனைகளை பட்டியலிட்டார்.
எம்.ஆர்.ராதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையே இருந்த நட்பை விவரித்தார். தமிழக முதல்வராவதற்கு ஸ்டாலினுக்கு எல்லா தகுதிகளும் இருக்கிறது. ஐம்பது வருட அனுபவம் உள்ளவர் ஸ்டாலின் எனக் கூறிவிட்டு, வீடுகட்டுவதற்கு முட்டு கொடுக்க சவுக்கு மரங்களை பயன்படுத்துவார்கள். வீடு கட்டி முடித்துவிட்டு கிரஹப்பிரவேசம் செய்யும்போது சவுக்கு மரத்தை தூக்கி ஓரமாக போட்டுவிட்டு வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். அதுபோல் உழைத்தவர்களை உதாசீதனப்படுத்தாதீர்கள் எனக் கோரினார்.
இறுதியில், நாம் எல்லோருமே கலைஞரின் குடும்பம்தான் எனக் கூறிய ராதாரவி, இந்த அமைப்பு பிடிக்காதவர்கள் இதிலிருந்து விலகி விடுங்கள் எனக் கூறினார்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, நான் பேசியதில் எதும் தவறில்லை என நினைக்கிறேன், தவறாக பேசியிருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்கமாட்டேன் என அவருடைய பாணியில் சொல்லிவிட்டு விடைபெற்றுக்கொண்டார்.