Don't Miss!
- News ரூ.150 கோடி மதிப்பு! 1200 பேருக்கு இலவச அறுவை சிகிச்சை! மாஸ் காட்டும் பாரிவேந்தர்
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
இறங்கி வந்த ராதிகா... பெப்சியுடன் சமரசம்!
சென்னை: பெப்சியை உடைத்து புதிய சங்கம் உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுத்த ராதிகா சரத்குமார், பெப்சியுடன சமரசமாகப் போவதாகக் கூறிவிட்டார்.
பெப்சியை உடைக்கும் எண்ணமே தமக்கில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துடன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) பல மாதங்களாக நடத்திய பேச்சுவார்த்தை முடியாமல் இருந்தது.
பெப்சியை உடைக்க முயற்சி
இதனால் ராதிகா தலைமையிலான சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் தனியாக பிரிந்து தொழிற்சங்கத்தை ஏற்படுத்துவது பற்றி ஆலோசித்து வந்தது. இதையடுத்து நேற்று பெப்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் ராதிகா மற்றும் அவரது தலைமையில் இயங்குவோருக்கு தொழில் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
ராதிகா கடிதம்
இதைத் தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத் தலைவி ராதிகா சரத்குமார், பெப்சிக்கு மாற்றாக புதிய தொழிலாளர் அமைப்பு தொடங்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். மேலும், இரு அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு வாரங்களுக்குள் சம்பளம் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளும் பேசி முடிப்பதாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் உறுதி அளித்துள்ளார்.
ஒத்துழைப்பு
இதையடுத்து இன்று பெப்சி அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சின்னத்திரை தொடர்பான அனைத்து பணிகளுக்கும் பெப்சி தொழில் ஒத்துழைப்பு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பெப்சி தலைவர் அமீர், பொதுச் செயலாளர் சிவா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இருதரப்பும் கடிதம்
இதுதொடர்பாக ராதிகா கையெழுத்திட்டுக் கொடுத்த கடிதத்தை செய்தியாளர்களுக்கு அனுப்பியுள்ளது பெப்சி அமைப்பு.