Just In
- 7 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 7 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 10 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
- 11 hrs ago
ரொம்ப ஹேப்பி.. கேபிக்கு ரியோ மனைவி சொன்ன எமோஷனல் மெசேஜ்.. என்னன்னு நீங்களே பாருங்க!
Don't Miss!
- News
பிரிட்டனில் பரவும் உருமாறிய கொரோனா.. 24 மணி நேரத்தில் 55 ஆயிரம் பேர் வைரஸால் பாதிப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Automobiles
எக்ஸ்ட்ரா பம்பர் வரிசையில் அடுத்த அதிரடி! இனி இது இல்லாமல் டூவீலர் ஓட்டி பந்தா காட்ட முடியாது! என்ன தெரியுமா?
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி பெற்றாரா? பிரபல நடிகை விளக்கம்!
பெங்களூரு: மோசடி வழக்கில் கைதான ஜோதிடரிடம் இருந்து பணம் பெற்றதாக வந்த தகவல் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூருவை சேர்ந்தவர் யுவராஜ் சாமி. ஜோதிடரான இவர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க தலைவர்களின் பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளார்.
இப்படி யாரும் கேவலப்படுத்த முடியாது.. மக்கள் முட்டாள் அல்ல.. ரம்யாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாயின.

மீசை மாதவன்
நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1½ கோடி கொடுத்ததாகக் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னட நடிகையான குட்டி ராதிகா, ஜனநாதன் இயக்கிய இயற்கை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார். தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா உட்பட சில படங்களில் நடித்தார்.

முன்னாள் முதல்வர்
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஷமிகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் யுவராஜ் சாமி கொடுத்ததாகக் கூறிய பணம் பற்றி நடிகை குட்டி ராதிகா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஜோதிடம் பலித்துள்ளது
யுவராஜ் சாமி, என் குடும்ப ஜோதிடர். என் தந்தை நண்பரான அவர் எங்கள் குடும்பத்துடன் 17 வருடங்களாக நட்பில் இருந்து வருகிறார். எனது எதிர்காலம் குறித்து அவர் கூறிய ஜோதிடம் இதுவரை பலித்துள்ளது. இதனால் அவர் மீது எனக்கு மட்டுமின்றி எங்கள் குடும்பத்தினருக்கு நல்ல மரியாதை உள்ளது.

வரலாற்று படம்
அவர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்திருக்கிறார். அதன் மூலம் வரலாற்று படத்தை தயாரிக்க விரும்பினார். 'நாட்டிய ராணி சாந்தலா' என்ற படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம். இதில் நடிக்க எனக்கு முதல்கட்டமாக ரூ.15 லட்சம் அனுப்பினார். பிறகு தனது உறவினர் மூலம் ரூ.60 லட்சம் அனுப்பினார்.

சினிமா விஷயம்
அவ்வளவு தான். 1.25 கோடி பெற்றதாகச் சொல்வது தவறு. சினிமா விஷயம் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் அவருடன் எனக்கு தொடர்பு இல்லை. அவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதுவரை நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. நாங்கள் தான் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். இதில் நான் எந்த தவறும் செய்யவில்லை. இவ்வாறு கூறியுள்ளார்.