Don't Miss!
- Sports IPL 2024 CSK : சிஎஸ்கே அணியின் அடுத்த மேட்ச் எப்போது? எந்த அணியுடன்? முழு விவரம்
- Technology அடிச்சார் பாரு அம்பானி! மாசத்துக்கு ரூ.150 தான்.. SMS, அன்லிமிடெட் Calls, டேட்டா, Jio Cinema-னு எல்லாமே உண்டு!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக கூறிய வரு.. ராதிகா சரத்குமார் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: பட வாய்ப்புக்காக தன்னையும் படுக்கைக்கு அழைத்துள்ளார்கள் என நடிகை வரலட்சுமி கூறியதற்கு நடிகை ராதிக சரத்குமார் ரியாக்ட் செய்துள்ளார்.
Recommended Video
நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். போடா போடி படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார்.
இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து நடித்துள்ளார் நடிகை வரலட்சுமி. தமிழில் கால் பதித்த கையோடு கன்னடம் மலையாளம் என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார் வரு.
நெகட்டிவ் ரோல்
சசிக்குமாருடன் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா, விஜயுடன் சர்கார், தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சர்க்கார் மற்றும் சண்டக்கோழி ஆகிய படங்களில் அவர் நடித்த நெகட்டிவ் ரோல்கள் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சிறந்த வில்லிக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.
படுக்கைக்கு அழைத்தார்கள்
தற்போது தமிழில் 7 படங்களை கை வசம் வைத்துள்ளார் வரலட்சுமி. அதேநேரத்தில் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி, பட வாய்ப்புக்காக தன்னையும் சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைத்தார்கள் என தெரிவித்தார்.
பெரும் பரபரப்பு
அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறிய வரலட்சுமி, தமிழ் சினிமாவில் தான் என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் கூட தனக்கும் அந்த அவலம் ஏற்பட்டு இருப்பது வேதனை அளிப்பதாக கூறினார். நடிகை வரலட்சுமி இவ்வாறு கூறியது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சரியா சொல்லியிருக்க
இந்நிலையில் நடிகை வரலட்சுமியின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டு குறித்து அவரது தாயும் நடிகையுமான ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் சரியா சொல்லியிருக்க வரு.. உனக்கு பலமாக இருக்கிறேன் என கூறியுள்ளார். அவரது இந்த டிவிட்டை ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர்.
பெண்களுக்கு ஆதரவு
நடிகை வரலட்சுமி, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக சக்தி என்ற பாதுகாப்பு அமைப்பையும் நடத்தி வருகிறார். #MeeToo-க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் வரலட்சுமி, பெண்களுக்கு ஆதரவான நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.