Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜல்லிக்கட்டை அடுத்து நெடுவாசலுக்காக போராடும் ராகவா லாரன்ஸ்
சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகர் ராகவா லாரன்ஸ் நாளை உண்ணாவிரதம் இருக்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள், மாணவ செல்வங்கள் சென்னை மெரினா கடற்கரையில் அமர்ந்து அமைதிப் புரட்சி நடத்தினார்கள். அதை நாடே வியந்து திரும்பிப் பார்த்தது.
அந்த புரட்சியில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது அடுத்த போராட்டத்திற்கு தயாராகிவிட்டார்.
நெடுவாசல்
நெடுவாசல் விவசாய கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இளைஞர்கள்
சோறு போடும் விவசாயி வாடி நிற்பதை பார்த்த இளைர்கள் நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது.
ராகவா லாரன்ஸ்
ஜல்லிக்கட்டுக்காக மக்களோடு மக்களாக சேர்ந்து போராடிய நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட தயாராகிவிட்டார்.
உண்ணாவிரதம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார். இந்த போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. போராட்டம் நடத்த அனுமதி கிடைத்துவிட்டதாக லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.