Just In
- 16 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 1 hr ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- News
பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Finance
Budget 2021.. WFHல் இருக்கும் ஊழியர்களுக்கு வரி விலக்கு அளிக்கலாம்.. PwC சொன்ன செம விஷயம்..!
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதுவே முதல் வெற்றி! சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை.. ரஜினிக்கு கவிதை எழுதிய ராகவா லாரன்ஸ்!
சென்னை: தனது அரசியல் நிலைப்பாடு குறித்து நடிகர் ரஜினிகாந்த், நேற்று அறிவித்து இருந்த நிலையில், ரஜினிகாந்தின் ரசிகரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் பாரதியார் கவிதையை பயன்படுத்தி புதிய கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
நடன இயக்குநராக இருந்து நடிகரான ராகவா லாரன்ஸ், காஞ்சனா வரிசை படங்களின் மூலம் இயக்குநர் அவதாரத்தையும் எடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

தற்போது, பாலிவுட்டில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில், காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்தையும் இயக்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ், நேற்று ரஜினிகாந்த் முதல்வர் பதவி மீது தான் ஒருபோதும் ஆசைப்பட்டது இல்லை. ஆட்சி அதிகாரம் ஒருவர் இடத்திலும், கட்சி அதிகாரம் ஒருவரிடத்திலும் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வெளி மாநிலத்தை சேர்ந்த ரஜினிகாந்த், தமிழர்களை ஆளக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், ரஜினிகாந்த்தின் இந்த முடிவை சீமானும் வரவேற்று இருந்தார்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை என்ற தலைப்பில் ராகவா லாரன்ஸ் எழுதியுள்ள கவிதை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
"சூப்பர் ஸ்டாரின் அரசியல் சுவை
சுவை புதிது!
பொருள் புதிது!
வளம் புதிது!
சொற் புதிது!
சோதி மிக்க நவக்கவிதை,
எந்நாளும் அழியாத மா கவிதை!
"கவியரசன் தமிழுக்கு இல்லை என்ற வசை என்னால் கழிந்தது"
"என் பாட்டுக்கு ராஜா,
இது காட்டுக்கு ராஜா!"
இவை அன்று பாரதியார் சொன்னது!
இன்று நம் தலைவர் சொல்லும்
அரசியல் புதிது!
எண்ணங்கள் புதிது!
முதல்வர் பதவி வேண்டாம் என்கிற வழி புதிது!
இதை புரிந்து கொண்டால் நன்மை நமக்கு!
தலைவரை திட்டுபவர்கள் கூட,
தலைவரின் திட்டங்களையும்,
அவரது மனதையும் புரிந்து கொண்டு பாராட்டுகிறார்கள்!
இதுவே முதல் வெற்றி!
அப்படி தலைவரின் மனதை புரிந்து கொண்டு பாராட்டிய,
அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி!
நம் சூப்பர் ஸ்டார் அண்ணன் ரஜினிகாந் அவர்களின்
எண்ணங்கள் நிறைவேற,
நான் வணங்கும் ராகவேந்திரா சுவாமியை வேண்டிக் கொள்கிறேன்!
அன்புடன்
ராகவா லாரன்ஸ்"
என பதிவிட்டு, ரஜினி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார் ராகவா லாரன்ஸ்.