இந்த ஆர்யா, ஜெய் பேசிக்கிறதை பார்த்தால்...
சென்னை: நடிகர்கள் ஜெய், ஆர்யா ட்விட்டரில் பேசிக் கொண்டதை பார்த்தால் ராஜா ராணி படத்தின் இரண்டாம் பாகம் வருகிறது போன்று.
நடிகர் ஆர்யா கடந்த 11ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். நடிகர் ஜெய் ட்விட்டர் மூலம் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவர் தனது வாழ்த்தில் எப்போ ராஜா ராணி 2 படத்தை துவங்கலாம் என்று ஆர்யாவிடம் கேட்டிருந்தார். இதை பார்த்த ஆர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
நன்றி டார்லிங் உண்மை மச்சா சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் போன்று விரைவில் ராஜா ராணி 2 பண்ணுவோம் என்று தெரிவித்துள்ளார்.
அட்லீ விஜய்யை இயக்க உள்ளார். இந்நிலையில் ஆர்யாவும், ஜெய்யும் ராஜா ராணி 2 பற்றி பேசுகிறார்களே?
Comments


Click it and Unblock the Notifications