Don't Miss!
- News பெங்களூர், ஹைதராபாத்திற்கு அதிர்ச்சி.. 1 வருடத்தில் தட்டி தூக்கிய சென்னை.. இதுதான் உண்மையான வளர்ச்சி
- Technology ஒரு டிவிக்கு 2 டிவி ஆர்டர்.. 36 சதவீதம் டிஸ்கவுண்ட்.. ரூ.10,999-க்கு QLED டிவி.. டால்பி ஆடியோ.. எங்கு விற்பனை?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மோகன்லால் படம் கருடாவை இயக்குகிறேனா? எஸ்எஸ் ராஜமௌலி விளக்கம்!
பெரும் பட்ஜெட்டில் மோகன்லால் நடிக்கும் கருடா படத்தை எஸ்எஸ் ராஜமௌலி இயக்குகிறார் என்று சில தினங்களுக்கு முன் பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.
ஆனால் இதுபற்றி மோகன்லாலோ, ராஜமௌலியோ எதுவும் கூறவில்லை. இப்போது ராஜமௌலி அதுபற்றி வாய் திறந்துள்ளார்.
ராஜமௌலி
சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கேரளா வந்திருந்த ராஜமௌலியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, "கேரளா எனக்குப் பிடிக்கும். இந்த மாதிரி பிரமாதமான லொகேஷன்களைப் பார்க்க முடியாது.
மோகன்லால்
மோகன்லால் நான் மிகவும் மதிக்கும் கலைஞர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாகத்தான் இருக்கிறேன்.
பாகுபலி 2-ல்தான் முழுக் கவனமும்
ஆனால் இப்போதைக்கு என் கவனமெல்லாம் பாகுபலி 2-ஐ ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உருவாக்குவதில்தான் உள்ளது.
வதந்தி
கருடா படம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அப்படி ஒரு செய்தியை நான் ஊடகங்களில்தான் படித்தேன். எல்லாம் வெறும் வதந்திதான்," என்றார்.
பாகுபலி 3-ம் பாகம் உண்டா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவில்லை. அதே நேரம் மறுப்பும் தெரிவிக்கவில்லை. பாகுபலியின் மூன்றாவது பாகம் என்பது முதலிரு பாகங்களின் தொடர்ச்சியாக இருக்காது. கதையும் களமும் வேறாக இருக்கும் என்று ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்,