இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கவில்லை! - எஸ்எஸ் ராஜமவுலி
பாகுபலி படம் இத்தனை பெரிய வெற்றியைப் பெறும் என்று நிஜமாகவே நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.
உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பிய பாகுபலி படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மிகப் பெரிய வெற்றியைக் குவித்துள்ளது.

இந்திய சினிமா வரலாற்றில், தென்னிந்திய திரைப்படம் ஒன்று இத்தனை பிரமாண்டமாய் வெளியாகி, அதைவிட பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது இதுவே முதல் முறை.
இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான இயக்குநர் ராஜமவுலி இந்த வெற்றியை பெரிதாகக் கொண்டாடவில்லை.
இதுகுறித்து அவர் கூறுகையில், "பாகுபலி குறித்து வரும் செய்திகள், வசூல் விபரங்கள் எங்களுக்கே மலைப்பைத் தந்துள்ளது. இப்படி ஒரு பிரமாண்ட வெற்றியை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லை. இந்தப் படம் ஒரு புதிய களம், புதிய அனுபவம் என்பதால் ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஒரு புதிய உலகைக் காணும் ஆர்வத்தில் வருகிறார்கள். அடுத்த பாகம் இன்னும் சிறப்பாக வரும். அடுத்த ஆண்டு நிச்சயம் வெளியிட்டுவிடுவோம்," என்றார்.


Click it and Unblock the Notifications











