Don't Miss!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Sports தம்பி! உனக்கு இது தான் கடைசி வாய்ப்பு.. ரூ.14 கோடி வீரருக்கு நெருக்கடி.. காத்திருக்கும் ஆல்ரவுண்டர்
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திரைத் துளி
சினிமா பாணியில் வில்லன் நடிகர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து கட்சிப் பிரமுகர் வீட்டைத் தாக்கிய வில்லன் நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமானராக்கி ராஜேஷ் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வண்ணார்பேட்டை பர்மா காலனியில் வசித்து வருபவர் துரைராஜ். அதே பகுதியில் வசித்து வருபவர் ஜான்சன். இவர்கள் இருவரும் ஸ்டன்ட் மாஸ்டர்ராக்கி ராஜேஷின் உறவினர்கள். ராஜேஷ், நடிகர் விஜயகாந்த்தின் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்துத் தருபவர்.
பணத்தகராறு காரணமாக துரைராஜூக்கும், ஜான்சனுக்கும் இடையே பிரச்சனை இருந்தது. இந்தத் தகராறைத் தீர்த்து வைக்க வடசென்னை மாவட்டக்குடியரசுக் கட்சித் தலைவர் ஜவகர் வந்துள்ளார். அப்போது ராக்கி ராஜேஷூம், அவரது மனைவியும் உடன் இருந்தார்கள்.
பேச்சுவார்த்தையின்போது, தகராறு ஏற்பட்டு ராக்கி ராஜேஷூக்கும், ஜவகருக்கும் சண்டை ஏற்படும் நிலை வந்தது. உடனே ராஜேஷின் மனைவிதிரைப்படத்தில் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் ஸ்டண்ட் நடிகர்களுக்குத் தகவல் கொடுத்தார்.
அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். ஜவகர் வீட்டுக்குச் சென்று வீட்டை அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஜவகர் போலீஸில் புகார்கொடுத்தார்.
புகாரின் பேரில் ராக்கி ராஜேஷ், ஸ்டண்ட் நடிகர்கள் புஷ்பராஜ், செல்வராஜ், யேசுதாஸ், சுரேஷ், பிரகாஷ், ராஜ் ஆகிய 7 பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.