திரைத் துளி
நடிகர் ரஜினி ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள மந்த்ராலயத்துக்குச் சென்று ராகவேந்திரசுவாமிகளை வழிபட்டார்.
பெங்களூரில் இருந்து மந்த்ராலயம் சென்ற ரஜினிக்கு பீடாதிபதி சுசமீந்திர தீர்த்தா சேவுவஸ்திரத்தைஅணிவித்து ஆசி வழங்கினார்.
இதையடுத்து ரஜினி ஹைதராபாத்துக்குச் சென்றார். முன்னதாக நிருபர்களிடம் பேசிய ரஜினி,சாதாரண பஸ் கண்டராக இருந்து, வில்லன் நடிகனாக இருந்து வந்த தன்னை இந்த அளவுக்குஉயர்த்தியது ராகவேந்திர சுவாமிகளின் அருள் தான் என்றார்.
இம் மாதம் நடக்கவுள்ள ராகவேந்திர சுவாமிகளின் 333வது ஆராதனை உற்சவத்தில் பங்கேற்கவருமாறு ரஜினிக்கு மந்த்ராலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











