Don't Miss!
- News குலுங்கியது திருப்பரங்குன்றம்.. முருகப்பெருமான் - தெய்வானை திருக்கல்யாணம்.. பரவசத்தில் பூரித்த மதுரை
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
திரைத் துளி
சென்னை:
கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ.21 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் ரஜினிகாந்த்வழங்குகிறார்.
சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜயகாந்த் ரூ.10 லட்சம், அஜீத் ரூ.10 லட்சம், விஜய் ரூ.5 லட்சம், சூர்யா ரூ.2லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந் நிலையில் ரஜினிகாந்த் ரூ.21 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகில் பாவிகள் அதிகரித்தால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளும் ஏழை மக்களும் தான். நம் அறிவுக்கு எட்டாத ஆண்டவனின் குரூரசெயல். அப்பாவி மக்களுக்கு நடந்த கோரத்தை நினைத்தால் நெஞ்சு துடிக்கிறது.
பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மீண்டும் இத்தகைய மிருத்யு தாண்டவம் நடக்கக்கூடாது என்றும் கடவுளைப்பிரார்த்திக்கிறேன். என்னுடைய அனில் சேவையாக ரூ.21 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குவழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி வரும் 3ம் தேதி சென்னை திரும்புகிறார். அன்று ஜெயலலிதாவைச் சந்தித்து இந்தத் தொகையைவழங்குகிறார். இதனை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு தெரிவித்தார்.