Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 4 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 4 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருச்சி ரஜினி மன்ற தலைவர் மறைவு... ரஜினி இரங்கல்!
திருச்சி: திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சாகுல் ஹமீது இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வந்தார் சாகுல் ஹமீது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். அண்மையில் போனில் தொடர்பு கொண்டு சாகுல் ஹமீது உடல் நிலையை விசாரித்து ஆறுதல் கூறினார் ரஜினி.
இந்த நிலையில் சாகுல் ஹமீது இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அந்த இரங்கல் அறிக்கையில், "திருச்சி மாவட்ட ரஜினி மன்றத் தலைவராக கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்ட விஐ சாகுல் ஹமீது அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மன்றப் பணிகள் என்றும் நம் நினைவை விட்டு அகலாதவை. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
