Don't Miss!
- Automobiles டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
- News Silent Period பற்றி தெரியுமா? கண்காணிப்பில் சமூக ஊடகம்! கருத்து கந்தசாமிகளே உஷார்!
- Lifestyle அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் குறிப்புகள்..!
- Finance ஓடியாங்க ஓடியாங்க.. தங்கம் விலை திடீர்ன்னு குறைஞ்சிருக்கு..!! செம சான்ஸ்..!
- Technology பாதிக்கு பாதி விலையில் பிராண்டட் AC-க்கள்.. முழுசா 52% டிஸ்கவுண்ட்.. பட்டிதொட்டி எங்கும் ஆர்டர் பறக்குது!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
திருச்சி ரஜினி மன்ற தலைவர் மறைவு... ரஜினி இரங்கல்!
திருச்சி: திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சாகுல் ஹமீது இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.
அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வந்தார் சாகுல் ஹமீது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். அண்மையில் போனில் தொடர்பு கொண்டு சாகுல் ஹமீது உடல் நிலையை விசாரித்து ஆறுதல் கூறினார் ரஜினி.
இந்த நிலையில் சாகுல் ஹமீது இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் அறிக்கையில், "திருச்சி மாவட்ட ரஜினி மன்றத் தலைவராக கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்ட விஐ சாகுல் ஹமீது அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மன்றப் பணிகள் என்றும் நம் நினைவை விட்டு அகலாதவை. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.