Just In
- 7 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அரசியலில் ரஜினியின் வழி, காமராஜர் - அண்ணா வழி! - தமிழருவி மணியன்
சென்னை : காமராஜர் மற்றும் அண்ணா வழியில் அரசியல் செய்யப்போவதாக தமிழருவி மணியனிடம், ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுவரை தமிழக தொலைக்காட்சிகள் மட்டுமே ரஜினியின் அரசியலை மையப்படுத்தி பரபரப்பு கிளப்பி வந்தனர். சமீபத்தில் கமல் ஹாசனின் அரசியல் ட்விட்களைத் தொடர்ந்து, தமிழக ஊடகங்கள் அவரை முன்னிலைப்படுத்தி வருகிறார்கள்.

இந் நிலையில் வட இந்திய தொலைக்காட்சிகளுக்கு ரஜினியின் அரசியல் முக்கிய செய்தியாகி வருகிறது. ரஜினியுடன் தொடர்புடையவர்களை எல்லாம் பேட்டி கண்டு செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
தமிழக தொலைக்காட்சிக்கு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, ரஜினியின் அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவித்ததில்லை. வட இந்திய சேனல்களுக்கு ரஜினியின் முக்கிய திட்டங்கள் தண்ணீர் பிரச்சனை தீர்ப்பதும், அரசியலில் ஊழலை ஒழிப்பதும் என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.
தமிழருவி மணியனிடமும் வட இந்திய சேனல் பேட்டி கண்டுள்ளார்கள். அரசியலுக்கு ரஜினி நிச்சயம் வருகிறார். தனிக்கட்சி அமைத்து ஆட்சியை பிடிப்பார் என்று அவர் உறுதிபட கூறியுள்ளார்.
மேலும் அரசியலில் காமராஜர் மற்றும் அண்ணாவை பின்பற்றப் போவதாக ரஜினி கூறியுள்ளதையும், தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காமராஜரும் அண்ணாவும் மட்டுமே அரசியலுக்கு வந்து சொத்து சேர்க்காத தலைவர்கள். ஆகையால் அவர்கள் இருவர்தான் தனக்கு வழிகாட்டிகள் என்றும் ரஜினி கூறியுள்ளார்.
ஏற்கனவே தனது முதல் அறிவிப்பாக, பணம் சம்பாதிக்கும் ஆசையுள்ள ரசிகர்களை சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று ரஜினி கூறியிருந்தார்.
தற்போது திருச்சியில் காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில், ரஜினியின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பேரணியும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 20ம் தேதி திருச்சியில் தமிழருவி மணியன் தலைமையில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு, ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.