பாகுபலிக்கு வந்த பாராட்டுகளிலேயே சிறந்தது ரஜினி சொன்னதுதான்!- எஸ்எஸ் ராஜமவுலி
பாகுபலிக்கு இதுவரை வந்த பாராட்டுக்களிலேயே சிறந்தது ரஜினியின் பாராட்டுதான் என்றார் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி.
இந்தியாவின் மிகப் பெரிய வசூல் குவித்த படமான பாகுபலி படம் வெளியானதுமே ரஜினி பார்த்துவிட்டார். பார்த்து முடித்த கையோடு தனது பாராட்டுகளை எஸ்எஸ் ராஜமவுலிக்கும், அவர் குழுவுக்கும் தெரிவித்துவிட்டார்.

என்ன சொல்லிப் பாராட்டினார் ரஜினிகாந்த்?
இதை ராஜமவுலியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்:
"பாகுபலிக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு ரஜினி அவர்களின் பாராட்டுதான். ஆனால், அவர் என்ன சொன்னார் என்பதைத் தெரிவிக்க மாட்டேன். அது எனக்கு ரொம்ப தனிப்பட்ட முறையில் அமைந்தது. என்னுள்ளே இருக்கட்டும். வெளியே தெரிவிக்க இயலாது," என்றார்.


Click it and Unblock the Notifications











