Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அரசியலுக்கு வர சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் ரஜினி: நண்பர் ராஜ் பகதூர்
பெங்களூர்: ரஜினி அரசியலுக்கு வருவார், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் என அவரின் நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். 15ம் தேதி சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசினார்.
அரசியலுக்கு வருவேன் என்றும் கூறவில்லை, வர மாட்டேன் என்றும் அவர் கூறவில்லை.
ரசிகர்கள்
ரஜினியின் பேச்சை கேட்ட ரசிகர்கள் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை பெற்றுள்ளனர். மற்றவர்களோ அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ராஜ் பகதூர்
ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பெங்களூரை சேர்ந்த அவரின் நண்பர் ராஜ் பகதூர் பேட்டி அளித்துள்ளார்.
ரஜினி
ரஜினி கடந்த முறை பெங்களூருக்கு வந்தபோது அரசியல் பற்றி என்னுடன் 12 மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் தமிழக அரசியல் சூழலை உற்று கவனித்து வருகிறார் என்று ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.
அரசியல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்று ரஜினி கூறினார். அவர் தமிழக மக்களின் நலனை மனதில் வைத்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்கிறார் ராஜ் பகதூர்.