Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கபாலி கதை இப்படி இருக்குமோ?
சென்னை: ரஜினி - ரஞ்சித் இணையும் புதிய படமான கபாலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.
அட்டக்கத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோர் ரஜினியுடன் இணைந்து கபாலியில் நடிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் கதை இப்படி இருக்குமோ என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது, மேலும் இந்தக் கதை உண்மையாக இருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன.
இந்தக் கதையை படித்தால் இதுதான் உண்மைக் கதையோ என்று நம்பும் அளவிற்கு இருக்கிறது, அப்படி என்ன கதை என்று கேட்கிறீர்களா? கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கபாலி
கதைப்படி ரஜினி அனாதையாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருக்க, அவரைக் கண்டெடுக்கும் பெரியவர் ஒருவர் அவருக்கு கபாலீஸ்வரன் என்று பெயர் வைத்து வளர்க்கிறார்.
சிவபக்தர்
வளரும் ரஜினி பெரிய ஆளாக வளர்ந்த பின்பு தாதாயிசத்தை கையில் எடுக்கிறார், ஆனால் சிவனைக் கேட்காமல்(கபாலீஸ்வரர்) எந்த ஒரு காரியத்தையும் ரஜினி தொடங்க மாட்டார்.
ஏழை மக்களைக் காப்பாற்ற
அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் போன்றவற்றை கையில் எடுத்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
குடும்பம் முக்கியம் பாஸ்
ஒரு கட்டத்தில் மனைவி, மகள் என்று குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
மலேசியா பயணம்
ரஜினி தனது வாழ்க்கையில் நிறைய இளைஞர்களை அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார், அவர்களில் மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சினைகள் ஆரம்பமாகிறது. இதனால் மறைமுகமாக மாறுவேடத்தில் மலேசியா செல்கிறார் ரஜினி.
பிரச்சினைகளை சமாளித்தாரா
மலேசியா இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களின் வாழ்வில் ரஜினி ஒளியேற்றினாரா, என்பதே மீதிக் கதையாம்.
இது உண்மையான கதையா? என்பது தெரியவில்லை..ஆனால் மலேசியாவில் ஷூட்டிங், மகளாக தன்ஷிகா நடிப்பது, ரஜினி டானாக தோன்றுவது எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டு பார்த்தால் கதை இப்படித்தான் வருகிறது.
ரஞ்சித் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, பார்க்கலாம்...
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!