Don't Miss!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- News புதிய ரேஷன் கார்டுகள் எப்போது.. காத்திருக்கும் 2 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள்..தமிழக அரசுக்கு கோரிக்கை
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
விஜய், அதர்வாவுக்கு ரஜினி கொடுத்த அங்கீகாரம்!
தமிழ் சினிமா என்றல்ல.. இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை ரஜினிகாந்த். அப்படி ஒரு ஆளுமை, வளர்ந்து வரும் கலைஞர்களை வியந்து வாழ்த்துவது அரிதான விஷயம்.
ஆனால் இதனை பலமுறை செய்தவர், செய்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.
சமீபத்தில் கணிதன் படத்தைப் பார்த்த ரஜினி, அதில் நடித்த அதர்வாவைப் பாராட்டியுள்ளோர். அத்துடன், அவரைப் பார்த்தபோது தனக்கு விஜய்யைப் பார்த்தது போலிருந்தது என இரண்டு கலைஞர்களையும் கவுரவப்படுத்தியுள்ளார்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள கணிதன் படத்தை, வெளிவருவதற்கு முன்பே, ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.
படத்தை இடைவெளி இல்லாமல் பார்த்த ரஜினி, அரை மணி நேரம் படத்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். மேலும், அறிமுக இயக்குனர் ஒருவருக்கு படவாய்ப்பு கொடுத்ததற்கு தாணுவுக்கு பாராட்டு தெரிவித்தார். அதர்வாவை பார்க்கும்போது விஜய்யை பார்த்ததுபோல் இருப்பதாகவும், இப்படத்தை இயக்கிய டி.எம்.சந்தோஷை தான் பார்க்க விரும்புவதாகவும் அவரிடம் கூறியுள்ளார்.
ரஜினியிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது படக்குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ரஜினி சார் என்னுடைய பெயரை உச்சரித்ததே நான் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் என்று இயக்குனர் டி.எம்.சந்தோஷ் ஆனந்தத்தில் மிதக்கிறார்.