ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்!
ரஜினியை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் ராகவா லாரன்ஸ்.
பி வாசு இயக்கத்தில் சிவலிங்கா படத்தில் நடித்து வருகிறார் இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ்.

இந்தப் படத்தின் கதையை முதலில் ரஜினியிடம்தான் கூறி, நடிக்க கால்ஷீட் கேட்டிருந்தார் பி வாசு. ஆனால் அப்போது கபாலி, 2.ஓ படங்களில் பிஸியாக இருந்தார். எனவே ராகவா லாரன்ஸை அதில் நடிக்க வைத்தார்.
இந்தப் படத்தில் தான் நடிப்பதற்கு வாழ்த்துக் கோரி ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பட வேலைகள் குறித்த தகவல்களை ரஜினி கேட்டறிந்தார்.
இந்த சந்திப்பின்போது, தனது தாயாருக்கும், காயத்திரி தேவிக்கும் கோவில் கட்டி வருவதை பற்றியும் அது சம்மந்தமான புகைப்படங்களை அவருக்கு காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.
Comments


Click it and Unblock the Notifications