Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்த பிறகு முக்கிய அறிவிப்பு வெளியிடும் ரஜினி!
Recommended Video
சென்னை: நாளை முதல் மூன்று நாட்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கும் ரஜினிகாந்த், அதன் பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.
அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், அடுத்து தனது ரஜினி மக்கள் மன்றத்துக்கு ஆள் சேர்ப்பை தீவிரப்படுத்தினார். தமிழகம் முழுவதும் ஆள் சேர்ப்பு வேலை ஜரூராக நடந்து வருகிறது.
இதுவரை மூன்று மாவட்டங்களுக்கு நிர்வாகிகளையும் அறிவித்துள்ளார் ரஜினி. கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களுக்கு அடுத்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் திடீரென தனது மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்தார் ரஜினிகாந்த். அதில் உறுப்பினர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
இப்போது மீண்டும் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். இந்த சந்திப்பு நாளை தொடங்கி மூன்று நாட்கள் நடக்கும் என்று தெரிகிறது. நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்த பிறகு முக்கிய அரசியல் அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட இருக்கிறார். அத்துடன் மண்டல வாரியாக நிர்வாகிகளையும் அவர் அறிவிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.