Don't Miss!
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Automobiles உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ரஜினியின் புதிய படம் அறிவிப்பு.. தாணு தயாரிக்க ரஞ்சித் இயக்குகிறார்!
சென்னை: ரஜினிகாந்தின் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.
இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க பா ரஞ்சித் இயக்குகிறார்.
மலேஷியா, தாய்லாந்து, ஹாங்காங், சென்னையில் 120 நாட்கள் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
படத்தின் தலைப்பு, பிற நடிக நடிகையர் விவரங்களை விரைவில் அறிவிக்கவிருப்பதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து இன்று ரஜினி - தாணு தரப்பிலிருந்து அவர்களின் பிஆர்ஓக்கள் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
40 வருடங்களுக்கு முன்பு, சுப்பிரமணியா பிலிம்ஸ் - கலைப்புலி இண்டர்நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களைத் தொடங்கி தன் கலைப்பயணத்தைத் தொடங்கியவர் கலைப்புலி எஸ். தாணு.
சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டியவர்
ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணுதான், முதன்முறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை ரஜினியின் பெயருடன் இணைத்து பைரவி படத்தை விளம்பரம் செய்தார்.
விநியோகஸ்தராக இருந்த கலைப்புலி எஸ். தாணு, 1984 ஆம் ஆண்டு தயாரிப்பாளராகி... யார் என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இத்திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கௌரவ வேடத்தில் நடித்தார்.
ரஜினி - தாணு நட்பு
கலைப்புலி எஸ். தாணு தயாரித்து முதன்முறையாக இயக்கிய புதுப்பாடகன் படம் உட்பட அவர் தயாரித்த பல படங்களை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்ததே சூப்பர்ஸ்டார் ரஜினிதான்.
ரஜினி நடித்த அண்ணாமலை, முத்து, பாட்ஷா, குசேலன் ஆகிய படங்கள் உருவாகும் நேரத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் சூழல் இருந்தது, சில பல காரணங்களால் காலதாமதம் ஆனது.
தாணுவின் தவம்
ரஜினியை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என ஏறக்குறைய 35 வருடங்களாக கலைப்புலி எஸ். தாணு தவம் இருந்தார். அவரது தவத்துக்குக் கிடைத்த வரமாக தற்போது, கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார் ரஜினி.
பா ரஞ்சித்
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார் பா.இரஞ்சித். அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இவர் இயக்கும் மூன்றாவது படம் இது.
சந்தோஷ் நாராயணன்
கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ்நாராயணன் இசையமைக்கிறார்.
தொழில்நுட்பக் குழு
மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்கள் - கபிலன், உமாதேவி, கானா பாலா. கலை இயக்கம் - ராமலிங்கம். படத்தொகுப்பு - பிரவீன் கே.எல். சண்டைப்பயிற்சி - அன்பு - அறிவு
நடனம் - சதீஷ். ஒலி வடிவமைப்பு - ரூபன்.
120 நாட்கள்
ஆகஸ்ட் மாதம் மலேஷியாவில் படப்பிடிப்பு தொடங்கி, 60 நாட்கள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து தாய்லாந்து, ஹாங்காங்க் மற்றும் சென்னையில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
-இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.