Don't Miss!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Lifestyle April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- News தேனி அருகே ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை! - ரஜினிகாந்த்
Recommended Video
கமல் ஹாஸன் வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
10 நாட்கள் இமயமலை ஆன்மீகப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார் ரஜினிகாந்த். தனது போயஸ் தோட்ட இல்லத்தை அடைந்த ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டி வருவது குறித்துக் கேட்கப்பட்டபோது, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நான் எப்போதோ சொல்லி விட்டேன். தமிழக அரசு இதுகுறித்து உறுதியாக மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்," என்றார்.
பல விஷயங்களில் நீங்கள் மௌனம் காப்பதாக கமல் ஹாஸன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "கமல்ஹாசன் வைத்த குற்றச்சாட்டுகள் பற்றி நான் பதில் கூற விரும்பவில்லை," என்றார் ரஜினிகாந்த்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ரஜினி எதுவும் சொல்லவில்லையே என முன்பு கமல் ஹாஸனிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது கமல், 'அவர் (ரஜினி) பல்வேறு விஷயங்களில் அப்படித்தான் இருக்கிறார். எனவே இந்த ஒரு விஷயம் பற்றி மட்டும் குற்றம் சாட்டுவது சரியல்ல," என்றார்.