Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவி நடிகை 'எஸ்கேப்'
லூதியானா: ராமாயணத்தை எழுதிய வால்மீகியை அவமதித்த வழக்கில் நடிகை ராக்கி சாவந்த் கைது செய்யப்படவில்லையாம். அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சர்சையின் செல்லப்பிள்ளை பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த். நேரம் கிடைக்கும் போது எல்லாம் நடிகை சன்னி லியோனை கடுமையாக விமர்சித்து வருபவர்.
பிரதமர் மோடியின் புகைப்படம் அடங்கிய உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.
வால்மீகி
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரை அவர் அவமதித்து பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.
நீதிமன்றம்
வால்மீகி முனிவரை அவமதித்த வழக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை சம்மன் அனுப்பியும் ராக்கி நேரில் ஆஜராகவில்லை.
பிடிவாரண்ட்
கடந்த 9ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் ராக்கி நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். பஞ்சாப் போலீசார் நேற்று மும்பை வந்து ராக்கியை கைது செய்ததாக செய்திகள் வெளியாகின.
ராக்கி
மும்பை முகவரியில் ராக்கி இல்லாததால் அவரை கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் ராக்கி போலீசில் சரண் அடைந்துவிட்டதாக அவரின் ஆட்கள் கூறுகிறார்கள்.
தலைமறைவு
ராக்கி தற்போது எங்கு உள்ளார் என்று தெரியாமல் போலீசார் குழம்புகிறார்கள். மும்பையில் அவர் இல்லாததால் பஞ்சாப் போலீசார் திரும்பிச் சென்றுள்ளனர். ராக்கி வழக்கு வரும் 10ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.