ரசிகரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்ட நடிகை ரகுல் ப்ரீத் சிங்: காரணம்...
ஹைதராபாத்: தன்னை பின் தொடர்ந்து வந்த ரசிகரை கோபத்தில் சப்பென்று அறைந்ததாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக உள்ளார் ரகுல் ப்ரீத் சிங். அவர் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸுடன் சேர்ந்து நடித்துள்ள ஜெய ஜானகி நாயகா தெலுங்கு படம் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் ரகுல் கலந்து கொண்டு வருகிறார். விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

ஹைதராபாத்
ஹைதராபாத்தில் உள்ள மால் ஒன்றுக்கு அண்மையில் சென்றிருந்தேன். அங்கு ரசிகர் ஒருவர் என்னை பின்தொடர்ந்து வந்தார். திடீர் என்று திரும்பிப் பார்த்தால் மிக அருகில் இருந்தார்.

அறை
அந்த ரசிகரின் செயலால் கோபம் வந்தது. அவரோ நான் பல காலமாக உங்களை பின்தொடர்கிறேன் என்றார். அதை கேட்ட நான் அவரது கன்னத்தில் ஓங்கு ஒரு அறை விட்டேன்.

கோபம்
வழக்கமாக நான் கோபப்பட மாட்டேன். ஆனால் கோபம் வந்துவிட்டது என்றால் என்னால் கட்டுப்படுத்த முடியாது. கோபத்தில் நான் என்ன செய்கிறேன் என்றே தெரியாது என்றார் ரகுல்.

ஸ்பைடர்
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் வெளியாகும் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங். இந்த படத்தை அவர் பெரிதும் எதிர்பார்க்கிறார்.


Click it and Unblock the Notifications











