Don't Miss!
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- News கெஜ்ரிவால் கைது+காங். வங்கி கணக்கு முடக்கம்.. அமெரிக்கா, ஜெர்மனியை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஐநா
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கால்நூற்றாண்டுக்குப் பிறகு மீண்டும் இணையும் தெலுங்குக் கூட்டணி!
ஐதராபாத் : தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டு சர்ச்சை இயக்குனர் என பெயரெடுத்தவர் ராம் கோபால் வர்மா. முன்பெல்லாம் இன்று யாரை வம்பிழுக்கப் போகிறாரோ என அவரது ட்வீட்களுக்காகவே காத்திருப்பார்கள் ரசிகர்கள். சமீபகாலமாக ட்விட்டரில் அடக்கிவாசித்து வருகிறார்.
தெலுங்கில் என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் 'லட்சுமியின் என்.டி.ஆர்' படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தில் என்.டி.ஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தை அடுத்து நாகார்ஜூனாவை வைத்து ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனாவை வைத்து 1990-ம் ஆண்டு 'ஷிவா', 1993-ம் ஆண்டு 'கோவிந்தா கோவிந்தா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.
அந்தவகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள். இந்தப் படம் அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. நாகார்ஜூனா இதுவரையில் நடித்திராத மாதிரியான ஆக்ஷன் கதையாக இருக்கும் எனக் குறிப்ப்பிட்டிருக்கிறார் ராம் கோபால் வர்மா. இத்தனை வருடங்கள் கழித்து இனைந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.