மசாஜ் செய்ய ஹனியை அனுப்பி வைங்க: மனு தாக்கல் செய்த ராம் ரஹீம் சிங்
சன்டிகர்: தனக்கு மசாஜ் செய்துவிட ஹனிப்ரீத் இன்சானை தன்னுடன் சிறையில் இருக்க அனுமதிக்குமாறு சாமியார் ராம் ரஹீம் சிங் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்ற சாமியாரும், நடிகருமான ராம் ரஹீம் சிங் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சான் தலைமறைவாகிவிட்டார்.

ஹனி
ஹனிப்ரீத் இன்சானை தன்னுடன் சிறையில் இருக்க அனுமதிக்குமாறு ராம் ரஹீம் சிங் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தனக்கு பிசியோதெரபி மற்றும் மசாஜ் செய்துவிட்ட ஹனி தன்னுடன் இருந்தால் வசதியாக இருக்கும் என்று அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

சிபிஐ
ராம் ரஹீம் சிங்கின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தன் மனைவி, மகன், சொந்த மகள்களை பற்றி கவலைப்படாமல் வளர்ப்பு மகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் ராம் ரஹீம் சிங்.

சாமியார்
ராம் ரஹீம் சிங்கிற்கும், ஹனிப்ரீத் இன்சானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக ஹனியின் முன்னாள் கணவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறை
சுனாரியா சிறையில் ராம் ரஹீம் சிங்கிற்கு எந்த சிறப்பு வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என்று சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை போலீசார் அப்படியே பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











