Don't Miss!
- News வாங்களேன்.. உட்கார்ந்து பேசி உங்களுக்கு நல்லா புரிய வைக்கிறேன்.. மோடிக்கு கார்கே கடிதம்
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிவாஜி சிலையை கடற்கரையில் வைத்தாலும் மணிமண்டபத்தில் வைத்தாலும் சம்மதமே! - ராம்குமார்
சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை எங்கு வைத்தாலும் சம்மதமே. அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் நாங்கள் கட்டுப்படுகிறோம் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் கூறியுள்ளார்.
இன்று சிவாஜியின் 16வது நினைவு தினம். இதையொட்டி திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் சிவாஜிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இன்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் அளித்த பேட்டியில், "நடிகர் திலகம் சிவாஜி சிலையை எங்கு அமைத்தாலும் சந்தோஷம்தான்.
தமிழக அரசு அமைத்துள்ள சிவாஜி மணி மண்டபம் விரைவில் திறக்கப்பட இருக்கிறது.
அரசும், அதிகாரிகளும் எங்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருக்கிறார்கள். முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்.
அப்பா மறைந்து 16 ஆண்டுகள் ஆனாலும் அவர் எல்லோர் மனதிலும் அவர் நிறைந்து இருக்கிறார். அவரது சிலையை கடற்கரையில் அமைத்தாலும் மகிழ்ச்சி. மணி மண்டபத்தில் அமைத்தாலும் மகிழ்ச்சிதான். அரசு, நீதிமன்றம் ஆகியவற்றுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்," என்றார்.